இந்தியாவில் 4000 வகை கத்தரி ரகங்கள் உள்ளன. நமது நாட்டில் ஆண்டு ஒன்றுக்கு 12 லட்சம் கோடி அளவுக்கு கத்தரி வியாபாரம் நடைபெறுகிறது. பி.டி.கத்தரிக்காயை, இந்தியாவில் பயிரிட முயற்சிப்பதன் மூலம் மேலைநாடுகள் புதிய தொழில்நுட்பத்தை பரிசோதித்து பார்க்கும் இடமாக இந்தியாவை மாற்ற முயற்சிக்கின்றன.ஒரு உணவுப்பொருளை எட்டு வகையான சோதனை செய்த பிறகே பயன்பாட்டுக்கு அனுமதிக்க வேண்டும். பி.டி கத்தரி விஷயத்தில் எந்தச் சோதனையும் மேற்கொள்ளப்படவில்லை.
இந்த ரகம் அனுமதிக்கப்பட்டால் பாரம்பரிய விதைகள் காணாமல் போய்விடும்.
மரபணு மாற்றம் செய்யப்பட்ட கத்தரியிலிருந்து விதை கிடைக்காது. இதைப் பயிரிட மான்சாண்டோ நிறுவனத்தை சார்ந்தே இருக்க வேண்டும். இக்கத்தரியினால் பல தீய விளைவுகள் ஏற்படும் என அறிவியல் அறிஞர்கள், நாடு முழுவதும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். நாடு முழுவதும் ஆதரவாகவும், எதிர்ப்பாகவும் கருத்துகள் வந்துகொண்டிருக்கின்றன.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment