Saturday 6 March 2010

நிறுவனங்கள் செய்வது நில அபகரிப்பா?

இந்தியாவின் சிறந்த நிறுவனங்களாக கருதப்படும் இன்போசிஸ் விப்ரோ போன்ற நிறுவனங்கள், மாநில முதல்வர்களை பார்த்து 500 ஏக்கர் நிலம் வேண்டும் , 700 ஏக்கர் நிலம் வேண்டும் என்று கேட்பது அன்றாட வாடிக்கையாக போய்விட்டது .


இது தவிர, இப்போதெல்லாம் சிறப்பு பொருளாதார மண்டலம் SEZ என்ற கூத்து வேறு , இது பற்றி வேறு பதிவில்.

ஒரு கேள்வி, சுலபமான கேள்வி தான் , 200- 300 ஏக்கர் நிலத்தை என்ன செய்யப்போகிறாகள்? இந்திய நிறுவனங்கள் தங்களை தொழில்நுட்பத்தில் சூரப்புலிகள் என்று கருதிக்கொண்டிருக்கின்றன , அந்த tech savvy தனந்தை கட்டடக்கலையிலும் காட்டலாம்.

1 இலட்சம் பேர் வேலை செய்ய வசதியாக ஐந்து 20 மாடி கட்டிடங்களை கட்டினால் போதும், 20 - 25 ஏக்கரில் வேலை முடிந்துவிடும். பெங்களுர் ITPL வெறும் 70 ஏக்கரில் சிறப்பாக இயங்குகிறது. 20 லட்சம் சதுர அடிக்கு கட்டிடம் இருக்கிறது. சுலபமாக 20000 பேரை தாங்கும்.

இப்படி எளிய வழி இருக்கையில் ஏன் நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலம் கேட்கிறார்கள் ?
பலர் சொல்வது போல் கம்பனிகள் நில அபகரிப்பில் (land grab) ஈடுபட்டுள்ளனவா?


No comments:

Post a Comment